பெரம்பூர்: பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையை சேர்ந்த சீனிவாசன் (39), கடந்த மாதம் 9ம் தேதி இரவு, தனது ஆட்டோவை வீட்டின் வெளியே நிறுத்தி இருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, ஆட்டோ திருடுபோனது தெரிந்தது. புகாரின் பேரில், திருவிக நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முகமது ரஹீம் (20), தனது நண்பருடன் வந்து ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, முகமது ரஹீமை கைது செய்தனர். அவரது நண்பரை தேடி வருகின்றனர்.