சென்னை: தமிழ்நாடு-ஆந்திரா எல்லையான ஆரம்பாக்கத்தில் ஆட்டோவில் குட்கா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ ஓட்டுனர் தாமோதரன் (53), மாலதி (43) ஆகியோரை ஆரம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 77 கிலோ குட்கா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.