மருமகனை வெட்டிய அத்தை கைது

பெரம்பூர்: வியாசர்பாடி நேரு நகர் 2வது தெருவை சேர்ந்தவர் எபினேசன் (23). இவரது எதிர் வீட்டில், இவரது அத்தை சாமுண்டீஸ்வரி (40) வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே கோழி மற்றும் புறா வளர்த்து வருகிறார். இதனால் எபினேசன் வீட்டிற்கும், சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் சாமுண்டீஸ்வரி தனது வீட்டின் அருகே உள்ள மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். இதை எபினேசன் கண்டித்ததால், இருவருக்கும் இடையே கராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி கையில் வைத்திருந்த கத்தியால் எபினேசனை வெட்டினார். இதில் அவரது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சாமுண்டீஸ்வரியை கைது செய்தனர்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது