திருத்தணியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருத்தணி: திருத்தணியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்தணி – மாத்தூர் சாலையில் உள்ள திருத்தணி சட்டமன்ற அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் என்எம்ஆர் பணி வழங்கக் கோரி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முனிரத்தினம், சேகர், கோபி சந்திரன், பெருமாள், ஏகாம்பரம், புண்ணியமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெடுஞ்சாலைத் துறையில் விடுபட்டுள்ள என்எம்ஆர் பணியாளர்களுக்கு பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்