அப்போது, அவ்வழியாக சென்ற சிலர் கத்தி கூச்சல்போட அந்த மர்ம நபர் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தலைமறைவானார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த செய்யூர் போலீசார் ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவியில் பதிவான ஆதாரத்தை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் செய்யூர் பஜார் பகுதியில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் திருட்டு, பிக்பாக்கெட், கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதே பஜார் பகுதியின் அருகில்தான் காவல் நிலையம் அமைந்துள்ளதாகவும். ஆனால் ஒருநாளும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதேநிலை தொடர்ந்தால் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்க கூடும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.