அதே விடுதியில் அந்த ஆல்பத்தில் நடிக்கும் கொல்லத்தை சேர்ந்த நடிகை ஒருவருக்கும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரும் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து இருக்கிறார். இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் இரவில் மதுசூதனன், அந்த நடிகையை தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். நடிகையும் அவரது அறைக்கு சென்று உள்ளார். அப்போது மதுசூதனன், அந்த நடிகையை மது குடிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். பின்னர் அவரை பலாத்காரம் செய்யவும் முயற்சித்து உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத நடிகை அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நடிகை அறையில் இருந்து தப்பி வெளியே ஓடினார். பின்னர் இது குறித்து பேக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மாஜி டிஎஸ்பி மதுசூதனன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.