உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது என வாலிபர் மீது தாக்கு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ராக்கம்பாளையம் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என வீட்டில் அத்துமீறி புகுந்து இரும்புராடல் தாக்கிய இருவரை கைது செய்யக்கோரி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கும்மிடிப்பூண்டி அடுத்த மேலகழனி ஊராட்சி, ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(37). இவரது மனைவி கலைவாணி. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், ரமேஷ் ஆகியோர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து இரும்புராடால் பார்த்திபனை பலமாக தாக்கியுள்ளனர். பார்த்திபனின் அலறல் சத்ததை கேட்டு அவருடைய மனைவி கலைவாணி மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து தடுக்க முயன்றனர். இதில் மாமியாருக்கும் உடலில் சில காயங்களுடன் அங்கிருந்து உயிர் தப்பினார்.

அப்போது கலைவாணி எதற்காக என் கணவரை தாக்கினீர்கள் என கேட்டதற்கு, உள்ளாட்சி தேர்தலில் உன் கணவர் போட்டியிடக் கூடாது என கூறிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். அதன் பின்பு பார்த்திபனை கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கலைவாணி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த அதேபகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் மேற்கண்ட இரண்டு பேரை இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாட்ஸ்அப் குழுவில் பரவலாக பரவி வருகிறது.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை