அப்போது கலைவாணி எதற்காக என் கணவரை தாக்கினீர்கள் என கேட்டதற்கு, உள்ளாட்சி தேர்தலில் உன் கணவர் போட்டியிடக் கூடாது என கூறிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். அதன் பின்பு பார்த்திபனை கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கலைவாணி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த அதேபகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் மேற்கண்ட இரண்டு பேரை இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாட்ஸ்அப் குழுவில் பரவலாக பரவி வருகிறது.