அப்போது அந்த வழியாக 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், வேதாரண்யம் மீனவர்களின் படகில் ஏறி இரும்பு பைப்புகளால் 4 பேரை சரமாரியாக தாக்கியதோடு படகில் இருந்த ₹3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ வலைகளை பறித்து சென்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.