மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்பவனத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகியோர் கடந்த 13ம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் இரவு மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், வேதாரண்யம் மீனவர்களின் படகில் ஏறி இரும்பு பைப்புகளால் 4 பேரை சரமாரியாக தாக்கியதோடு படகில் இருந்த ₹3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ வலைகளை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்