இதுகுறித்து ஜூனியர் டாக்டர்கள் கூறுகையில், ‘கொல்கத்தா மருத்துவக் கல்லூரி சம்பவத்தை தொடர்ந்து, சாகர் தத்தா மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து மூன்று மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. அதனால் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மருத்துவமனைகளில் எங்களின் பாதுகாப்பு குறித்து தலைமைச் செயலாளரைச் சந்தித்து 10 நாட்களாகியும், இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்தால், போராட்டத்தை மறுபரிசீலனை செய்வோம். இல்லையெனில் முழு அளவிலான போராட்டம் நடத்துவோம். அக்டோபர் 2ம் தேதி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்’ என்றனர்.