இதனால் அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது அஜித்குமார் தனது நண்பர் அகிலேஷ் என்பவருடன் சேர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அங்கு கிடந்த கல்லை எடுத்து போலீஸ்காரர் சரவணன் தலையில் சரமாரியாக அடித்துவிட்டு அஜித்குமார் தப்பிவிட்டார். இதையடுத்து அகிலேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்துவந்தனர். போலீஸ்காரர் சரவணன் சிகிச்சை பெறுகின்றார்.
இதுபற்றி அகிலேஷிடம் விசாரித்ததில், ‘’திருச்சி நாவல்பேட்டை பகுதியை சேர்ந்த அகிலேஷ் சென்னை பெருங்குடி பகுதியில் வசித்துக்கொண்டு ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். ரவுடியான அஜித்குமாருடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தியுள்ளார்’ என தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசாரை தாக்கிய வழக்கில் அகிலேஷ் மீது வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமாக அஜித்குமாரை தேடி வருகின்றனர்.