இதில் ஜூமாந்தின் இறந்தான். அஜர் அலிக்கு இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அஜார் அலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனிடம் குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார். அஜர்அலி தெரிவித்த விவரங்களை நீதிபதி வீடியோ பதிவு செய்தார். இதனிடையே கொள்ளையர் கைது, என்கவுன்டர் குறித்து நேரில் விசாரிக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நாளை நாமக்கல் வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.