சேலம்: ஆத்தூர் தம்மம்பட்டி அருகே 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை மைதானத்தில் இருந்து வெளியே ஓடி வந்தபோது தண்ணீர் இல்லாத 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் காளையை கயிறு கட்டி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.