திருவனந்தபுரம்: கடந்த 1982ம் ஆண்டு நடந்த ஆசியப் போட்டியில் பத்மினி தாமஸ் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலமும், 4×400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் ஆட்சியின் போது கேரள விளையாட்டுக் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பத்மினி தாமஸ் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜ தேர்தல் கமிட்டி அலுவலகத்தில் வைத்து இக்கட்சியில் இணைந்தார்.