அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணி – அமைச்சர் ஆலோசனை


ஈரோடு: அத்திக்கடவு -அவிநாசி திட்டப்பணி குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பணி முடிந்து சோதனை ஓட்டம் நடந்த நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பவானி ஆற்றில் ஆண்டுக்கு ஒன்றரை டிஎம்சி உபரி நீரை நீரேற்று குழாய்கள் மூலம் 3 மாவட்டங்களில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தில் 1,045 குளம், குட்டைகளை நிரப்புவதே அவிநாசி-அத்திக்கடவு திட்டம் ஆகும்.

 

Related posts

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்