அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,916 கோடியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார். வல்லம்-வடகால் கிராமத்தில் ரூ.706.50 கோடியில் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஃபாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு

வீட்டு பணியாளரை தாக்கியது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

யூடியூபர் வழக்குகள்: தனி அமர்வு கோரிய மனு தள்ளுபடி