அத்திக்கடவு-அவிநாசி திட்டம் பாஜ போராட்டம் கைவிடப்படுகிறது: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜ சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். தற்போது, ஆகஸ்ட் 17ம் தேதி (இன்று) திட்டத்தை தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் பாஜ சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு