சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்திருப்பதாக அழைப்புகள் வந்துள்ளன என தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 24 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்திருப்பதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 6000க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.