சென்னை: உதவி குடியேற்றத்துறை அதிகாரி பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளிக்க உத்தரவு அளித்துள்ளது. குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து உதவி குடியேற்றத் துறை அதிகாரியான திருநங்கை வழக்கு தொடர்ந்தார். பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க, குழந்தையை தத்தெடுக்க பிரித்திகா யாஷினி முடிவு செய்துள்ளார்.