சென்னை: உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் தேர்வுக்கான தேர்வு மையம் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு 7ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறுவதாக அறவிக்கப்பட்டிருந்து. இந்த தேர்வுக்கு தஞ்சாவூர் தேர்வு மையத்தை தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு அருகில் உள்ள திருச்சி தேர்வு மையம் ஒதுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.