உதவி தோட்டக்கலை அலுவலர் பணி 158 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை – உழவர் நலத்துறையில் 158 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு மூலம் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு 158 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் 5 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!

வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண் கைது!

வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும் : அமைச்சர் துரைமுருகன்