சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கிலிருந்து சென்னை துறைமுக அதிகாரி ராஜிவ் கோலியை விடுவித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் 1990-2000 ஆண்டு வரை பணியாற்றிய ராஜிவ் கோலி, வருமானத்திற்கு அதிகமாக ₹27,23,475.03-க்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.