2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு இபிஎஸ் மூடுவிழா நடத்தி விடுவார்: டிடிவி.தினகரன் காட்டம்

சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். காஞ்சிபுரத்தில் அமமுக நிர்வாகி திருமண விழாவில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி. தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் பலவீனம் ஆகி வருகிறது.

அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது என்பதால்தான் தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு பழனிசாமிக்கு காவடி தூக்கிக் கொண்டு இருந்தார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சிக்கு பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்