Tuesday, October 22, 2024
Home » 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு இபிஎஸ் மூடுவிழா நடத்தி விடுவார்: டிடிவி.தினகரன் காட்டம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு இபிஎஸ் மூடுவிழா நடத்தி விடுவார்: டிடிவி.தினகரன் காட்டம்

by Mahaprabhu

சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். காஞ்சிபுரத்தில் அமமுக நிர்வாகி திருமண விழாவில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி. தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் பலவீனம் ஆகி வருகிறது.

அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது என்பதால்தான் தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு பழனிசாமிக்கு காவடி தூக்கிக் கொண்டு இருந்தார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சிக்கு பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi