சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளை சட்டமன்ற தொகுதி வாரியாக ஆய்வு செய்தால் 222 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது. திராவிட மாடல் அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலுடன் கூறுகிறேன். தேர்தல் தோல்வியை மறைக்க அதிமுக போட்ட சதித் திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து எழுப்பியது என்றும் தெரிவித்தார்.