இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், எம்பியுமான டி.என். பிரதாபன் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது: கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் பேசிய பேச்சை 16 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சடித்து வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானதாகும்.
எனவே முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலாளர் வேணு மற்றும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் சுபாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.