சென்னை: சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார். அவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவை விதிகளின்படி அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அவைக்கு வந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளார்.