துரைப்பாக்கம்: சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் நேற்று முன்தினம், கிண்டியிலிருந்து ‘ேரபிடோ’ ஆப்பில் பதிவு செய்து நடனசபாபதி (28) என்பவரின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார். இறக்கிவிடும் இடத்தில் நடன சபாபதி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். உடனே அந்த பெண் ஹெல்மெட்டால் அவரை தாக்கி அங்கிருந்து துரத்தினார். பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடனசபாபதியை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.