தமிழக-கர்நாடக எல்லையில் அசாம் வாலிபர் எரித்துக்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பள்ளூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அத்திப்பள்ளி போலீஸ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த தீபக் ஹரிசன்(25) என்பது தெரிந்தது. இவர் பள்ளூர் பகுதியில் தங்கி, ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.இவரை மர்மநபர்கள் எரித்துக் கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது