எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் அஞ்சாமல் தங்கள் பயணம் தொடரும் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவின் மிக மோசமான ஊழல்வாதியாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா உள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நீதிக்கான பயணத்தில் பங்கேற்க I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த அவர், கூட்டணி கட்சிகள் பங்கேற்றால் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், “அசாம் முதலமைச்சர் மற்றம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகள் மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளன. தற்போது, அசாமின் முக்கிய விவாதப் பொருளாக நீதிக்கான பயணம் மாறியுள்ளது. இதுபோன்ற மிரட்டல் விடும் யுக்திகள் தான் பாஜகவின் பாணியாக உள்ளது. ஆனால், நீதிக்கான பயணத்தின் செய்தி மக்களை சென்றடைகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.