அசாம் உள்துறை செயலாளர் தற்கொலை

கவுகாத்தி: அசாம் உள்துறை செயலாளர் ஷிலாத்தியா சேத்தியா மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இந்திய காவல் பணி அதிகாரியான ஷிலாத்தியா சேத்தியா டின்சுகியா மற்றும் சோனிப்பூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், அசாம் காவல்துறை 4வது பட்டாலியனின் கமான்டன்டாகவும் பணியாற்றினார். சேத்தியாவின் மனைவி மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து சோகத்தில் இருந்து சேத்தியா மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் காந்திமதிநாதன் ஓய்வு: வீட்டிற்கு அழைத்து பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவா? ஊடக செய்திக்கு 3 நாட்களுக்கு பின் பிரேன் சிங் மறுப்பு