இந்த வழக்கை அசாம் மாநில போலீசும் என்.ஐ.ஏ அமைப்பும் சேர்ந்து விசாரித்துவரும் நிலையில், செப்டம்பர் 21ம் தேதி இந்த வழக்கில் 15 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் செக்யூரிட்டி பணியில் இருந்த அசாமை சேர்ந்த கிரிஷ் போராவிற்கு கவுகாத்தியில் குண்டு வைத்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் பெங்களூருவில் கிரிஷ் போராவை கைது செய்தனர்.