சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமானநிலையத்தில் அவர் பேட்டியளிக்கையில், ‘‘சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டது பற்றி என்னிடம் வந்து ஏன் கேட்கிறீர்கள்? யாரைக் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேளுங்கள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தினால் தான், கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க முடியும்’’ என்றார்.