ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி லீக் சுற்றில் மட்டும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. இந்நிலையில் தான் ஆறுதல் வெற்றி பெறும் ஆசையுடன் வங்கதேச அணி இன்று இந்தியாவை சந்திக்கிறது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத இந்தியா சூப்பர்-4 சுற்றை வெற்றியுடன் முடிக்க முனைப்புக் காட்டும். எனவே இன்றைய ஆட்டமும் விறுவிறுப்பாகவே இருக்கும். அதற்கு இலங்கையில் தொடரும் மழை அனுமதிக்க வேண்டும்.