மதுரை: ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு என்றும் அவர் தெரிவித்தார்.