டெல்லி: ஜாமின் நிறுத்திவைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி ஐகோர்ட். டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.