டெல்லி: விசாரணை நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமின் மீதான இடைக்கால தடை தொடரும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை வழக்கு மற்றும் ஆவணங்களை சரிவர பரிசீலிக்கவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.