தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தொடங்கியது. கோலாகலமாகத் தொடங்கிய ஆவணித் திருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செப்.2இல் நடைபெற உள்ளது.