அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா கோரிக்கை

சென்னை : அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆராசா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். அருந்ததிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட போதுமான தரிசு நிலங்கள் உள்ளன என்றும் ஏற்கனவே எனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தரிசு நிலங்களை கண்டறிந்து வீட்டு மனைப் பட்டா வழங்கி உள்ளோம் என்றும் கூறிய திமுக எம்.பி. ஆ.ராசா, மற்ற மாவட்டங்களிலும் தரிசு நிலங்களை கண்டறிந்து அருந்ததிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!