இடாநகர்: அருணாச்சலபிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் பேரவை உறுப்பினரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான நினோங் எரிங், மற்றொரு பேரவை உறுப்பினர் வாங்லின் லோவாங்டாங் ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி பாஜவில் இணைந்தனர்.
இதையடுத்து பேரவையில் காங்கிரசின் பலம் 2ஆக குறைந்திருந்த நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் லம்போ தாயெங் கடந்த 4ம் தேதி பாஜவில் இணைந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வரும், சாகலி பேரவை தொகுதி உறுப்பினருமான நபம் துகி, நேற்று தன் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு துகி அனுப்பி வைத்தார்.