இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்படி, அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான பைக் நம்பரை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று அரும்பாக்கம் மார்க்கெட் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது 2 பேரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்கு முரணான பேசினர். இதையடுத்து அவர்கள் வந்தது திருட்டு பைக்கா என்று நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது இளம்பெண்ணிடம் செல்போன் பறிக்கும்போது பயன்படுத்திய பைக் என்பது தெரிந்தது.
இதையடுத்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் ராமு(எ)ராமு பிரசாத்(24), இவரது தம்பி கார்த்திக்(22) என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், பைக்கை பறிமுதல் செய்து செய்தனர். இதன்பின்னர் 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.