சென்னை: ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர் ரூசோவின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிதத்தை அடுத்து மனுவை நீதிபதி தமிழ்ச்செல்வி தள்ளுபடி செய்தார். ஆருத்ரா நிறுவனம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான இயக்குநர் ரூசோ ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.