சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 35,925 முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். இதுவரை ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.