இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றும், கேடயமும் வழங்குவதோடு, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி வரவேற்றார். ஒன்றிய திமுக செயலாளர் ப.ச.கமலேஷ் முன்னிலை வகித்தார். அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜே.ரமேஷ், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் இறையன்பு குத்தூஸ், மாநில, மாவட்ட நிர்வாகள் ஜெரால்டு, ராஜி, காயத்ரி ஸ்ரீதரன், தெய்வசிகாமணி, அரசன், நகர செயலாளர் திருமலை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.