அமெரிக்காவில் பி.என்.ஒய். மெல்லான் நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.