ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அருகே சோமங்கலம், புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி (38). இவர், மகளுடன் கடந்த 11ம்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரேவதி, இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம் (20), நரேஷ் (25), ஷேக் ஜானுல்லா (18) ஆகிய 3 பேரும், வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகையை பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.