வீட்டில் குட்கா விற்ற அக்கா, தங்கை உள்பட 4 பேர் அதிரடி கைது

சோழிங்கநல்லூர்: சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் அபிநயா உள்ளிட்ட போலீசார் வில்லிவாக்கம் இந்திரா நகர் நார்த் ஜெகநாதன் நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பண்டல் பண்டலாக குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சங்கீதா (44), அவரது கணவர் அணில் குமார் (50), மற்றும் சங்கீதாவின் தங்கை சலோமி (39), அவரது மகன் பிரவீன் (24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

Related posts

மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார்!