விஷ சாராய வழக்கில் கைது 11 பேரை சிபிசிஐடி 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 பேர் பேர் பலியான வழக்கில் கைதான 11 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அப்போது, கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உட்பட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி ராம், 11 பேரையும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, 3ம்தேதி (நாளை) மாலை 3 மணியளவில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்