ஊத்துக்கோட்டை அருகே ஓட்டலில் தகராறு உரிமையாளரை தாக்கி, கத்தியை காட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஓட்டலில் தகராறு செய்து உரிமையாளரை தாக்கி, கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கிராம எல்லையில் தனியார் கம்பெனி அருகில் தாபா ஓட்டல் நடத்தி வருபவர் இந்திரஜித் (47). கடந்த 2ம் தேதி, இவரது ஓட்டலுக்கு பைக்கில் வந்த 3 நபர்கள் சுக்கா ரொட்டி பார்சல் வேண்டும் என கேட்டனர். ஓட்டல் உரிமையாளர் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த டிரைவர்களுக்கு மட்டும் தான் சுக்கா ரொட்டி ரெடியாக உள்ளது என்று கூறினார்.

இதைக்கேட்ட 3 நபர்களும் ஏற்கனவே போட்டு வைத்துள்ள ரொட்டியை எங்களுக்கு கொடுங்கள் எனக்கேட்டு உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது கைகலப்பானது. அப்போது 3 பேரில் ஒருவர் ஓட்டல் உரிமையாளர் இந்திரஜித்திடம் கத்தியை காட்டி ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு 3 பேரும் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து இந்திரஜித் பென்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் ஓட்டலில் தகராறு செய்து, பணத்தை பறித்து சென்றது ஒதப்பை கிராமத்தை சேர்ந்த கவுதம் (22), பூண்டி அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் (20), பூண்டியை சேர்ந்த கவுதம் (24) என தெரிய வந்தது. மேலும், அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 560 ரொக்கப்பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்