சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3வது அலகு விரிவாக்கத்துக்காக, மேல்மா உள்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில் 125 நாட்களாக அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்காக விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, சிப்காட் விரிவாக்க திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.