பொதுஇடத்தில் மது குடித்தவர் கைது

 

ஈரோடு, ஏப். 27: ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புளியம்பட்டியில் இருந்து காவிலிபாளையம் செல்லும் சாலையில் உள்ள கொப்பம்பாளையம் பிரிவு பகுதியில் ஒரு நபர் மது அருந்திக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதேபகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் கோபால் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொது இடத்தில் மது அருந்தியதற்காக போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்த மதுபாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை